சிவாஜி படத்தின் பாட்டில் பல்லவ சிற்பத்தின் சாயல் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் வெளி வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்று விட்டது

http://www.youtube.com/watch?v=xjVm1sYuESc

எனினும் அந்த படத்தின் துவக்க பாட்டில் ஒரு விஷயத்தை நான் பார்த்தேன். ( மீண்டும் நான் எங்கும் செல்லவில்லை – இன்னும் சிற்பத்தில் தான் உள்ளேன் ) இதை அப்படியே விட்டு சிற்பத்திற்கு செல்வோம்.

சரி நாம் மல்லை சென்று பல வாரங்கள் ஆகிவிட்டன. இதோ இன்று சென்றுவிடுவோம், ஒரு மிக விநூதமான சிற்பம். அனைவரின் கண் முன்னரே இருந்தும் பலரும் கவனிக்காமல் செல்லும் சிற்பம். ஆம், உலகிலேயே மிக பெரிய மல்லை தவம் சிற்பம். ( சரி, வாடிக்கையாளர்கள் பலரும் நாம் தான் ஏற்கனவே பலமுறை அந்த தவத்தை பார்த்துவிட்டோமே – என்று சொல்வது கேட்கிறது ) எனினும் – இந்த இடுகையை படித்து பார்த்து முடித்த பின் இத்தனை முறை அங்கு சென்றும் இதை நாம் எப்படி விட்டோம் என்று சொல்வீர்கள், பின்னர் முதலில் சிவாஜி படத்தை இதனுள் கொண்டு வந்ததற்கும் விடை கிடைக்கும். .

சரி, படங்களை பாருங்கள் – தொலைவில் இருந்து மெல்ல நகிர்ந்து நாம் அருகே செல்கிறோம். முக்கிய நபர்கள் – இருவர். இல்லை , அவர்களுக்கு நடுவில் இருக்கும் ….யார் அது






குட்டி பூத கணம் – அதன் வயிற்றில் சிங்க முகம். அற்புத வேலை பாடு.இப்போது பாட்டை இங்கே கொண்டு வந்ததன் அர்த்தம் புரிந்ததா.

27942797

இதை சிற்பி என் செதுக்கினான். பல்லவ சிற்பியின் விளையாட்டு தனமா இது ? இல்லை வேறெங்கும் இது போல சிங்க தொப்பை கொண்ட பூத கணம் உண்டா? ஆம் உண்டு, நம் அமெரிக்க தோழி காதி அவர்கள் உதவியால் – ஆனால் அது அடுத்த இடுகையில்.

மீண்டும் ஒரு முறை வினோத தொப்பையை ரசியுங்கள்.
2780278527822788

இத்தனை முறை மல்லை சென்றும் இதை எப்படி பார்க்கவில்லை என்று தினருங்கள், அடுத்த முறை எங்கு சென்றாலும் உர்த்வ முகம் என்று அழைக்கப்படும் இந்த வினோத பூத கனத்தை தேடுங்கள்.

இன்றைய கதாநாயகன் காட்டும் உடல் கட்டு – பல்லவ கால சிற்பம்

பல காலமாக தமிழ் படங்களில் தொப்பையை இறுக கட்டி, அதன் மேல் சட்டை அதற்க்கு மேல் கோட் அணிந்து , சொட்டை தலையை மறைக்க விக் அணிந்து, முகத்திற்கு வெள்ளை அடித்து …அப்ப்பா, பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தனது பெண் வயது நடிகைகளுடன் மரங்களை சுற்றியும் வயிற்றில் பம்பரம் விட்டும் நம்மை அருவருப்பில் ஆழ்த்தி வந்த கோடம்பாக்கம் , மும்பை மற்றும் அமெரிக்க படங்களை பார்த்து கடைசியில் கொஞ்சம் திருந்தி தங்கள் இடையை கட்டுப்பாட்டில் ( சில நடிகைகளும் கூட ) கொண்டு வந்துள்ளனர். மிக நல்ல விஷயம் .

ஆனால் இவர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மல்லை மகிஷா சுரமர்தினி மண்டபத்தில் ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் வடித்த சிற்பத்தில் வரும் ஒரு வீரப்பெண் காட்டும் உதாரணம் ஏனோ முன்னரே எடுபடவில்லை.

புரியவில்லையா,படங்களை பாருங்கள். பல கோணங்களில் இடுகிறேன். தேவியை பார்காதீர்கள்.
2729270527082714271627312720
சரி சற்று அருகில் செல்வோம். இப்போது தெரிகிறதே. இடுகையின் அர்த்தம் புரிகிறதா ??

அப்பப்பா – என்ன ஒரு கட்டுடல், கையில் பெரிய கத்தி, மகிஷன் காலை வெட்டும் அந்த அற்புத சுந்தரியின் கட்டுடல் கண்ணை பறிக்கிறது. கச்சை கட்டி அவளது முறுக்கேறிய உடலை அழகே வடித்த சிற்பி வாழ்க.

இன்னும் உடற் பயிற்சி செய்யாமல் கணினி முன்னரும் தொலைக்காட்சி பெட்டி முன்னரும் அமைந்திருக்கும் என்னை போல் குண்டர்கள் முதலில் எழுந்து ஓடுங்கள். இடையை குறையுங்கள். சுவரை வைத்து தானே சித்திரம் ( சிற்பம்) எழுத ( செதுக்க ) முடியும்

பள்ளிகொண்டிருக்கும் அரங்கனை எதிர்த்து சதி பேசும் அசுரர்கள் – மல்லை

இன்றும் ஒரு சுவாரசியமான கதையோடு தொடர்புடைய சிற்பத்தை காண்போம் – மகாபலிபுரம் சென்று வந்த யாரும் இந்த சிற்பத்தை பார்க்காமல் திரும்பும் வாய்ப்பு குறைவு அதேபோல் இதன் பின்னனி கதையை அறிந்து ரசிக்கும் வாய்ப்பும் குறைவு. மகிஷாசுரமர்தினி மண்டபத்திலுள்ள அனந்தசயனின் சிற்பத்தை கண்டுகளிப்போம். ஊழிக்கால விஷ்ணுவின் மறத்தை பறை சாற்றும் கதையிது.

சற்றே வழக்கத்திற்கு மாறாக, முதலில் அனேகமானோர் அறியாத சிற்பத்தை பார்ப்போம் பிறகு கதைக்குச் செல்வோம்.

கல்லைக் குடைந்து கலைநுணுக்கத்தோடு கதையின் நாயகர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தும் கண்முன்னே வாழவைக்கும் தனித்துவம் வாய்ந்த சிற்பங்களைப் படைத்த சிற்பியின் திறமையை என்னவென்று வியப்பது.

இந்த அனந்தசயனனின் சிற்ப வகையின் சிறப்பை பேராசிரியர் சுவாமிநாதன் மூலம் தெரிந்துகொண்ட போது நான் மேலும் அதிசயப்பட்டேன்.

இப்பொழுது கதை, ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் முழு உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் ஆயிரம் தலை நாகத்தின் அணையில் பள்ளி கொண்டு (அனந்தசயனன்) யோகநித்திரையில் ஆழ்ந்திடுவான் பரந்தாமன். சகலமும் ஒடுங்கிய நேரம், பிரம்மன் மட்டும் அடுத்த யுகத்திற்கான தன் படைப்புத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்.

“உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான்” என்று மகாவிஷ்ணுவை வர்ணிப்பார் நம்மாழ்வார். திருமால் படுத்திருப்பது போல பாவனை செய்தாலும் அவன் என்றுமே யோக தவத்தில் ஈடுபடுபவன். அப்படிப்பட்ட திருமால் ‘உறங்குவான்’ போல இருந்திருக்கும் நிலையில் அவன் செவியின் குறட்டை தூசி வெளிப்பட அதிலிருந்து வந்தவர்கள்தான் மது-கைடவர்கள் எனும் அரக்கர்கள்.

இவர்கள் இருவரும் தங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லையென நினைத்து பிரம்மனை ஆட்டிப்படைத்தனர். பிரம்மன் தன் படைப்புத் தொழிலை செய்ய விடாமல் தடுத்தனர், பிரம்மனின் வேதங்களை பிடுங்கிக் கொண்டு படைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்தனர். இவர்களை பிரம்மனால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

(மது என்றால் சமஸ்கிருத்தில் தேன். மனதை மயக்கும் அதீதச் சுவை, மது என்றால் கள், சாரயமும் கூட. கை – என்றால் ஓசை என்று சமஸ்கிருத்தில் பொருள், கைடப என்பது இயலாமையால் உருவாகும் ஓசையை குறிக்கும். இந்த இரு தீய சக்திகளுள் மது நம்மை ஏதாவது ஒன்றாக உருவகப்படுத்தி காட்ட, கைடபவோ நம்மை எல்லாமாகவும் உருவகப்படுத்தி நம் உண்மைநிலையை மறைத்து ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிவிடும்.)

தனது ஞான சக்தியின் துணை கொண்டு விஷ்ணுவால் மட்டுமே இவர்களை அழிக்க முடியும் என்று அறிந்த பிரம்மா, யோகநித்திரையில் இருக்கும் விஷ்ணுவை எழுப்ப யோகமாயையை நாடுகிறார். மாயாதேவியால் துயில் நீங்கிய விஷ்ணு அரக்கர்களை அழித்து பிரம்மனை காப்பாற்றுகிறார் என்பது கதை. (நம் தேவையின் அளவறிந்து கதையை சுருக்கிக் கொள்கிறோம்)

மீண்டும் சிற்பத்தை காண வருகிறோம்,

ஒய்யாரமாய் பாம்பணையில் சாய்ந்திருக்கும் விஷ்ணுவின் எழில் மிகு சாந்தசொரூப முகம் காட்டுகிறது சிற்பியின் திறமையை.

அழாகாய் வடிக்கப்பட்ட இரண்டு கைகள், நீண்ட வலது கை எதையே பற்றிக்கொண்டிருக்கிறது. முழங்கையோடு வளைந்த இடக்கை (சிதைந்துவிட்டது), சற்றே உயர்ந்த மார்பு, சிரம் மற்றும் சிறிதளவு மடிந்த இடது கால்.( ஒருவேளை அவன் எழுப்பப்பட்டதால் எழுந்திருக்க முய்ல்கிறான் போலும்) கண் கவரும் கிரீடம், அழகான மார்பணி மற்றும் காதணிகளை கவனிக்கவும்.

அந்த அனந்தசயனம் படுத்திருக்கும் அன்ந்தனின் சிற்பத்தைப் பார்த்தீர்க்ளேயானால் ஐந்து தலைகளும் நிழல்குடை போல் விரித்த நாகத்தின் தலை அழகுற செதுக்கப்பட்டிருக்கும் சிற்பியின் திறனை இங்கு போற்றவேண்டும்.

படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் காலடிப் பகுதியில் ஈடிணையில்லாத ஓர் அழகுத் தேவதையின் சிற்பம். ஒருவேளை பூதேவியா – இல்லை – ம்காவிஷ்ணுவின் மாய உறக்கத்திலிருந்து துயிலெழுப்பும் மகாசக்தியா

அழகாய் சாய்ந்து படுத்திருக்கும் இறைவனுக்கு மேலே இரு பறக்கும் உருவங்களும், கீழே இரு உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இவை மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள், ஆயுத புருஷர்கள் என்று அழைக்கப்படுபவை. மேல் உள்ள இரண்டு பறக்கும் உருவங்களில் இடப்பக்கம் உள்ளது பாஞ்ச சன்யம் எனும் சங்கு, வலப்பக்கம் உள்ளதோ கௌமோதகி எனும் கதாயுதம். கீழே உள்ள அழகிய உருவங்களில் ஒன்று சுதர்சன சக்கரம் மற்றது நந்தகம் எனும் வாள். (இவை இரண்டும் மார்கண்டேயர் எனவும் பிருகு எனவும் சிலர் கூறுவர்)

(கௌமோதகி – பூதத்தாழ்வார், சுதர்சனம் – பொய்கையாழ்வார், நந்தகம் – பேயாழ்வார் என்றும் விஷ்ணுவின் ஆயுதங்கள் அவதாரமெடுத்ததென குறிப்பிடுவதுமுண்டு)

ஒரு அரக்கன் மற்றவன் தோள் மேல் சாய்வது போல ஏதோ கள்ளமொழியாக செவியில் கிசுகிசுப்பது சிற்பியின் கைவண்ணம். இது நேர்த்தியான திறன். சில நேரங்களில் கலைஞன் தன்னை, தன் திறமையை, உலகுக்கு அடையாளம் காட்ட ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் சிற்பம். ஒரு அரக்கன் இறைவனை தாக்க முற்படுதலும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்து ரசியுங்கள்

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்
170116991757
நாம் இன்றைக்கு மல்லையில் ஒரு அபூர்வமான இடம் செல்கிறோம். பலரும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு சென்றுவிடும் இடம். அங்கு செல்லும் சிலரும் அங்கு இருந்து தெரியும் அற்புத இயற்கை எழிலை மட்டுமே காண்கின்றனர். சிலர் புதிய கலங்கரை விளக்கத்தை ( அதுவே 1887 வில் நிறுவியது ) படம் எடுக்க இங்கே வருவர்.

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில் – இதை ஏன் அபூர்வம் என்று சொல்கிறோம். இது குடவரை கோயில் அல்ல, கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் , அதுவும் ஒரு சிறு மலையின் மேல். பல காலம் இதை ஆங்கிலேயர் கலங்கரை விளக்கமாக உபயோகித்தனர் !!( padangalukku nanri British Library)
16891686
168016831692
படங்களில் இருந்து இது இருக்கும் இடம் விளங்கும், மகிஷாசுரமர்தினி குகையை அடுத்து உள்ள குறுகிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும்.
17241722
எனினும் இந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது – காற்று மழை, கரி , மனிதன் என்று அனைத்தையும் தாண்டி தன் அருமையான சிற்பங்களுடன் உள்ளது – ராஜ சிம்ஹன் அவனது அழகிய சிங்க தூண்கள், நமக்கு மிகவும் பிடித்த குள்ள பூத கணங்கள், அருமை.
16971703170717511754
நான், திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் மல்லை ( விரைவில் புத்தகமாக வெளி வருகிறது ) படித்தபோது- மேலும் அறிந்தேன்.

17051709
பெயர் காரணம் – வீட்டுக்கு ஒரு உழக்கு எண்ணெய் சேகரித்து, இந்த கோவிலில் அணையா விளக்கு எரியுமாம். அதனால் அதற்கு உழக்கு எண்ணெய் ஈஸ்வரர் கோயில் என்ற பெயர் மழுவி ஓலக்கநெஸ்வர என்று வந்துள்ளது.
1709176517671762
இங்கே மூன்று அபாரமான சிற்பங்கள் உண்டு – ஒன்று தட்சிணாமூர்த்தி, ஆனந்த கூத்தாடும் கோலம் (இதே போல சிற்பம் காஞ்சி கைலாச நாதர் கோவிலும் உண்டு ) மற்றும் கைலாசத்தை அசைக்க முயலும் ராவணனை அடிபணிய வைக்கும் காட்சி. ( நாம் முன்னர் கம்போடியா , எல்லோரா இதே சிற்பம் பார்த்தோம் ) மிக அருமையான சிற்பம் – ஈசனின் தலையில் பிறை , ராவணன் வலியால் வாய் விட்டு இறைவது.
169517161718
பார்க்கும் போதே நெஞ்சம் வெடிக்கிறது

நவீன அரசர்கள் தங்கள் ஆசை நாயகிகளுடன் செய்யும் லீலைகளை ஆயிரம் ஆண்டு சிற்பம் என்றும் பாராமல் கல்வெட்டாக கிறுக்கிய கிறுக்கர்கள், இவர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா.
171117131716

ராவணனின் தலைஎழுத்தை மாற்ற இவர்கள் கைங்கர்யம்.
1845

கலையின் உச்சிக்கு எடுத்து சென்ற பல்லவனின் கலை பெட்டகம் – தமிழன் தலை நிமிர செய்யும் சிற்பம், கலை திறனை கண்டு தலை வணங்கும் வேலைப்பாடு – இதை பார்க்கும் பொது வெட்கி தலை …..

( நன்றி திரு சுவாமிநாதன் – எங்கள் பொன்னியின் செல்வன் குழும நண்பர்களை மல்லை பயணத்தில் கூட்டி சென்றதற்கு, படங்கள் – திரு ஸ்ரீராம், திரு பிளாஸ்டிக் சந்திரா , திரு விஞ்சாமூர் வெங்கடேஷ் )

மல்லை கடற்கரை கோயில் – ஒரு முதற் பார்வை

Flickr.com நண்பர்கள் திரு பிரபாகரன் ( ஆதி ஆர்ட்ஸ் என்ற பெயரில் அவரது அற்புத புகை படங்கள் ) மற்றும் ரவேஜஸ் என்ற பெயரில் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன், நான் உங்கள் அருமையான படங்களை இந்த தளத்தில் இடலாமா என்று கேட்டவுடன், மிகவும் பெருந்தன்மையுடன் – தாராளமாக இடுங்கள் என்று கூறி ஊக்குவித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
1570
மல்லை கடற் கரை கோவில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே – எனினும் அங்கு இருப்பது மூன்று கோவில்கள் என்று பலருக்கு தெரியாது. சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்த காட்சி – தொலைவில் இருந்தே இந்த உன்னத கலை கோவிலின் சிகரங்கள் நம்மை ஈர்க்கும். ஆயிரம் ஆண்டுகள் காற்று, மழை, கடலின் சீற்றம் அனைத்தையும் வென்று பல்லவர் கலை போற்றும் ஒரு அற்புத சின்னம். பொதுவாக எந்த ஓவியம், கட்டடம் போன்ற படைப்புகள் / காட்சிகளில் இருபுறமும் ஒரு சமநிலை வேண்டும் என்று வல்லுனர்கள் கற்றுக்கொடுப்பார்கள் – எனினும் இங்கே ஒரு கோபுரம் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருந்தும், நம் கண்ணில் அதை அழகாக தெரிய வைத்த சிற்ப திறன் அற்புதம் .
15671576
அது என்ன மூன்று ஆலயங்கள் ? முதலில் இருந்த பெருமாள் சிலையை ஒட்டி இரு சிவன் கோவில்கள் பல்லவ காலத்தில் உரு பெற்றன – ராஜ சிம்ஹ பல்லவன், ஒரு அபூர்வமான அரசன் ( அவன் நிறுவிய சாளுவன்குப்பம் புலி குகை நாம் முன்பே பார்த்தோம் – அங்கு இருக்கும் பாயும் சிங்க தூண்களுடன் கடற்கரை கோவில் சிற்பங்களை ஒப்பிடுங்கள் – அவனது மற்றொரு படைப்பான காஞ்சி கைலாசநாதர் கோவில் சிங்கங்கள் ஒரு பார்வையிலேயே அத்யந்தகாமன் என்ற அவன் முத்திரையை பதிக்கும் – வரும் மடல்களில் இவற்றை காண்போம் )
1574

ஒரு புறம் இருப்பது (நாலு அடுக்கு கோபுரம் ) க்ஷத்ரிய சிம்மேஷ்வரா ஆலயம் – மறு புறம் இருப்பது ( மூன்று அடுக்கு) ராஜசிம்மேஷ்வர ஆலயம்.

இவ்விரு சிவ ஆலயங்களின் நடுவில் பெருமாள் – சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளி கண்டருலிய தேவர் என்று வழங்கியது.

திருமங்கையாழ்வார் மல்லைக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்

“புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து

கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”

15721579

இங்கே வரும் தல சயனம் – இதை வரும் மடல்களில் பார்போம்.

கல்லை குடைய வேண்டுமே ?

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை – அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் – மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் – வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) – இதில் நமக்கு ஒரு நல்லது – பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) – அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் – அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.
14671483
148114611463
சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி – அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.
1465147314751477
149114931495
பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி – முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை – கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.
1458148514711479

இப்போது அதன் வெளிப்பாடு – கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.
1487

ஒரு கல்லின் மறுபக்கம்

மல்லை சாளுவன் குப்பம் ஒரு கலைபெட்டகம். நாம் முன்பு புலி குகை பார்த்தோம். அப்போது அங்கு இன்னும் இரெண்டு பொக்கிஷங்கள் உண்டு என்று கூறினேன்.

அவை, சிறு சிற்பம் என்றாலும் மிக அழகிய மகிஷாசுரமர்தினி மற்றும் அதன் அருகில் இருக்கும் குடவரை கோவில் (அதிரணசண்ட மண்டபம் -அதில் உள்ள ராஜ சிம்ஹன் கல்வெட்டு. அதை பிறகு பார்போம்.)

அந்த குடவரைக்கு முன் ஒரு சிறு கல் இருப்பதை பலரும் பார்ப்பதில்லை.

1156
அங்கு சென்று கல்லின் பின்புறம் பார்த்தல் ஒரு சிறு அற்புத மகிஷாசுரமர்தினி சிலைகோர்ப்பு இருப்பதை காணலாம்.
11241128
இதன் விநோதம் என்னவென்றால் – மல்லையில் இருக்கும் புகழ் பெற்ற இதே கதையின் ( மகிஷாசுரமர்தினி ) அடுத்த நிகழ்ச்சியை குறிக்குமாறு செதுக்கி உள்ளனர்.
1146
உற்று பாருங்கள் – மல்லை சிலையில் – மகிஷன் கையில் கதையுடன் சிங்கவாகனத்தின் மேல் இருக்கும் அன்னையை எதிர்கொள்ளும் கோலம்.
11421144
இங்கோ துவம்ச யுத்தத்தின் பின் சோர்வடைந்து கிழே விழுந்து இருக்கும் மகிஷன் ( சிறு வடிவமாக இருப்பினும் சோர்வில் அசுரனின் நாசி விரிந்து பெருமூசிடுமாறு உள்ளது ) – யுத்தத்தில் வெற்றி கொண்ட தேவி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும் கோலம்
மல்லை துர்கைக்கு எட்டு கைகள் – சாளுவன் குப்பம் துர்கைக்கு ஆறு கரங்கள்தான் உள்ளன.
113011321134
11371139
– அபாரம்.

இது மானுட வேலைபாடா

கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.

மல்லை பூனை, சைவ பூனையோ

மல்லை பகிரத பிரயத்தனம் காட்சியில் அடி புறத்தில் வரும் ஒரு சுவாரசியமான காட்சி
921934
– ஒரு கால் தூக்கி தபஸ் செய்யும் பகிரதன் ( அல்லது அர்ஜுனணன்) – அவனை பின் தொடரும் ஒரு பூனையும் அவனை போல் தபஸில் உள்ளது –
926929
அந்த பூனை செய்யும் பொய் தபஸில் ஏமார்ந்து தனது ஜென்ம எதிரியை துதிக்கும் எலி….. பூனையின் தவம் கலைந்தந்தும் என்ன ஆகும்…. அது சைவ #######பிள்ளை##### மன்னிக்கவும்
பூனையோ.
924932

மல்லை தவம் – யானைகள் ஒரு பார்வை

863841
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தங்கள் எழில் குறையாமல் இருக்கும் இவை அருமை. இவை அப்போது ( வடிவமைக்க பட்டவுடன் ) என்ன அழகுடன் இருந்திருக்கும் – இல்லையேல் ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் இவற்றுக்கு அழகு கூடுகிறதா??
855857859861
839
யானைகளின் மடிந்த காது, பின்னால் செல்லும் ( பெரிய) யானையின் வளைந்த துதிக்கை, ஒரு படத்தில் ( யானைகளின் முன்னால் இருந்து ) பாருங்கள் – யானை தலை மண்டை அமைப்பு ( குறிப்பாக இரண்டாம் யானையின் மண்டை – அழகாக இரு பிளவுகளுடன் ) – என்ன கம்பீரம் , இரு பெரிய யானைகளின் கால்களுக்குள், மற்றும் பின்னால் விளையாடும் குட்டி யானைகளின் அங்க அசைவுகள்…படத்தில் சூரிய வெளிச்சம் மற்றும் சிலையின் நிழல் செய்யும் விளையாட்டு – உயிரோட்டம்.
859865

இருக்கும் சிலை மிருகங்கள் போதாதென்று உயிர் ஆடுகள் வேறு. ( சிலையின் அளவை குறிக்க உதவுகிறது )
846849
( this picture is from a friend)
மல்லை சிற்பிகள் எந்த அளவிற்கு கலை வல்லுனர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இணைத்துள்ள யானை படத்துடன் சிர்ர்பங்களை ஒப்பிடுங்கள்
836859
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

என்னும் சீர்காழியின் வெங்கலக் குரலில் பாட்டு காதிலே ஒலிக்கிறது ( நன்றி திரு தமிழ்த்தேனீ ஐயா )