மைகேலன்ஜெலோவின் டேவிட் Vs நெல்லையப்பர் அர்ஜுனன் – பாகம் 2

முதல் பாகத்தில் மைகேலன்ஜெலோவின் டேவிட் சிற்ப்பத்தை நெல்லையப்பர் கர்ணனுடன் ஒப்பிட்டு பார்த்தோம். இன்று அதே காட்சியின் அடுத்த பாகம் செல்கிறோம். குருக்ஷேத்திர போரின் பதினாறாம் நாள் ! முதல் பத்து நாட்டகள் பிதாமகர் பீஷ்மரின் தந்திரத்தால் போரில் பங்கு எடுக்காமல் வெளியில் நின்ற கர்ணன், அவர் வீழ்ந்த பிறகு போரில் புகுந்து ஐந்து நாட்டகள் ஆகி விட்டன. கண்ணனின் உதவியுடன் பாண்டவர்களின் கை மேலோங்கி நிற்கிறது. கர்ணன் சென்ஜோட்ட்றுக் கடனுக்கு நண்பன் துர்யோதனன் வெல்ல அன்று போரின் போக்கை மாற்ற அர்ஜுனனை நேரடியாக எதிர்கொள்கிறான்.

அவனை அன்று வரை லேசாக நினைத்த அர்ஜுனனுக்கு கண்ணன் அவனது பெருமையை இவ்வாறு கூறுகிறான்.

“வேண்டாம். வலிமை மிக்கவனே ,அர்ஜுனா , கர்ணனை குறைவாக என்னதே, அவன் இந்த போரின் அணிகலன் , வலிமை மிக்கவன். ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன் . மஹாரதன். எல்லா போர் திர்ணகளையும் கற்றவன். பாண்டு புத்திரனே ,அவனை உனக்கு சமமாக மதி , ஏன் உன்னைவிடவும் வல்லவன் என்று நினை. அவனை வீழ்த்த வேண்டும் என்றால் நி உன்னுடைய திறன் அனைத்தையும் பிரயோகம் செய்ய வேண்டும் . அவனது சக்தி அக்னியை போன்றது, அவனது வேகம் காற்றை போன்றது, அவனது கோபம் காலனை போன்றது. வலிமை பொருந்திய அவன் ஒரு சிங்கத்தை போன்ற உடலை கொண்டவன். எட்டு ரதிகளை அடக்கியவன் அவன். என்ன பெரிய புஜங்கள் அவனது !வலிமை மிக்க பரந்த மார்பு உடைய அவன் அபராசிதன் ! அவன் ஒரு வீரன், வீரகளுக்கு எல்லாம் வீரன் – முன்னோடி வீரன். அழகு பொருந்தியவன். வீரனுக்கு என்னவெல்லாம் அழகோ அத்தனையும் பொருந்தியவன், பயம் அறியாதவன்., “

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் காட்சி எப்படி இருக்கும்.

அர்ஜுனனுக்கு எதிரில் கர்ணன் நாகாஸ்திரம் எடுத்து விட்டான் என்று தெரியும், அப்போது அவன் முகத்தில் என்ன தெரிகிறது ? ( இங்கே புது விதமாக தாடி, அதுவும் முடிவில் முடி போட்டு பின்னிய தாடி )

முதல் பார்வையில் , ஒரு சிறு அதிர்ச்சி , இடது கால் சற்று பின்னால் வாய்த்த படி, தலை சற்றே சாய்ந்து பார்க்கும் வண்ணம் உள்ளது

அர்ஜுனனின் மார்பு கர்ணனை போல அல்லாமல், நிதானமாக நிற்கும் வண்ணம் உள்ளது.

கர்ணனின் கோலம், அஸ்திரத்தை வில்லில் பூட்ட மூச்சை உள்வாங்கி நிற்பது போல உள்ளது.

அர்ஜுனின் கையிலும் அம்பு உள்ளது, அவன் முகத்தில் பயம் தெரிகிறது என்று சொல்ல முடியாது. அவனுக்கு அருகில் கண்ணன் இருக்கிறான் அவன் எப்படியாவது காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையினாலோ ?

முன்னர் பார்த்த டேவிட் சிற்பத்துடன் ஒப்பிடுவோம்.


அந்த முட்டி எலும்பு , பின்புறம் புடைக்கும் நரம்பு – எல்லாம் கருங்கல்லில் !!

அதுவும் அர்ஜுனன் கையில் பிடித்திருக்கும் அந்த அம்பு, அதன் ஈர்க்கில் ( சிறகு !), கை விரல்கள், விரல்களில் உள்ள நகங்கள். !!


சிற்பி காட்சியை அப்படியே அற்புதமாக, தத்ரூபமாக, நாம் காணவென்றே நம் கண்முன்னர் கொண்டு வந்து விடுகிறான்.