கலை புலிகள், மல்லை புலி குகை

சென்னை வாசிகள் பலருக்கு தெரியாத மூன்று கலை பெட்டகங்கள் மல்லைக்கு சற்றே முன்னர் சாளுவன்குப்பம் என்னும் இடத்தில் இருக்கிறது…மல்லை நுழைவதற்கு சுமார் இருநூறு அடி முன்னர் ASI போர்டு இருக்கிறது…ஆம் இங்கு இன்றும் புது புது கண்டு பிடிப்புகள் உண்டு…

 வெளி தோற்றத்தில் மிக எளிமையாக காட்சி அளிக்கும் இந்த இடம் …மூன்று அருமையான பல்லவ கலை பொக்கிஷங்களை கொண்டு உள்ளது.. ஒன்றொன்றாக பார்ப்போம்.

 

முதலில் புலி குகை என்று தவறாக அழைக்கப்படும் இந்த யாழி மண்டபம்…பதினோரு யாழிகள் சுற்றி இருக்க …..மேடை …இருபுறம் பாயும் சிங்கங்கள்…ராஜ சிம்ம பல்லவனின் சின்னம்…1300 வருடம் பழமை …நீங்கள் தொட்டு பார்க்கலாம்.

யாழி என்றோமே…எதனால்…உற்று பாருங்கள்…இவை பார்ப்பதற்கு சிங்கங்கள் போல இருந்தாலும் அழகிய வளைந்த கொம்புகளை உடையன..எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு எப்படி உணர்த்துவது…சரி…இதோ படத்துக்குள் நானே வருகிறேன்…குண்டாக ஆம் நூறு கிலோ எடையுடன் என்னை சிறியதாக காட்டும் சிற்பத்தின் அளவு இப்போது புரிந்ததா.


ஒரு புறமாக இருக்கும் மேடைக்கு அடுத்து இரு யானைகள்…அவற்றின் மேல் அம்பாரி…அதனுள்…ஆம் ஏறி படம் எடுத்தோம்…சரியாக தெரியவில்லை…மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன சிற்பங்கள்….


அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக இந்த அழகிய யாழி மண்டபத்தை கண்டு வாருங்கள்…இன்னும் இரண்டு இடங்கள் பாக்கி …..

இந்த கதை, கதையல்ல, நிஜம்

கல்யாண சாப்பாடு என்றாலே நமக்கு நினைவில் வரும் பாட்டு ….மாயா பஜார் …ரங்கா ராவ் அருமையான நடிப்பில் …கல்யாண சமையல் சாதம் பாட்டு …அதில் அவருடைய கதை …..கதை என்றவுடன்…பீமன், துரியோதனன் மற்றும் யமதர்மனின் கதைகளும் நினைவுக்கு வரும்..பல படங்களில் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய கதை உண்மையிலே இருக்குமா , அதை ஒருவனால் எடுத்து சுயற்ற முடுயுமோ …இல்லை இவை கற்பனையோ என்று வியந்ததுண்டு… இதற்க்கு சிற்பத்தில் விடை காண முற்பட்டபோது சென்னை நண்பர், புகை பட வல்லுநர் அசோக் கிருஷ்ணசாமி அவர்கள் நேற்று அனுப்பிய மாங்காடபத்து குடவரை கோவில் படங்கள் உதவின…இது விசித்ர சித்தன் என்ற பெயர் கொண்ட மஹேந்திர பல்லவனின் வேலை….

 

பார்ப்பதற்கு தண்டால் எடுக்கும் கட்டை போல இருக்கும் இவை அப்பப்பா… இதில் ஒரு போடு போட்டால் கபால மோட்சம் தான் ……இந்த அசுர கதையை அசால்டாக ( assaulta ) மன்னிக்கவும் அலட்சியமாக கொண்டு, வாய் பிளந்து பார்க்கும் நம்மை கண்டு ‘"போடி பயலே" என்று சிரிக்கும் இவ்விரு மஹா வீரர்கள் என்ன கம்பிரமாக நிற்கின்றனர் 

 

 

.அந்த கதையை ஒரு படம் எடுக்கும் நாகம் வேறு சுற்றயுள்ளது…. இவர்கள் இப்போது எங்கே போனார்கள்… இப்போது இருந்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கம் இவர்களுக்கே….. ( திரு திவாகர் சார் …. அவர் எழுதிய விசித்திரச் சித்தன் சரித்திர புதினம்…அருமை…அவர் இந்த படத்தை பார்த்தவுடன் எழுதிய குறிப்பு. .. விசித்திரச் சித்தன் பாறையைக் குடைந்து மும்மூர்த்திகளுக்கான சிவ-விஷ்ணு-ப்ரம்மாவுக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. அற்புதமான கலைப் படைப்பு. பல்லவ அரசனின் கல்வெட்டு சமுஸ்கிருதத்தில், பல்லவ கிரந்த எழுத்தில் ‘பிரம்ம,ஈஸ்வர விஷ்ணுவுக்காக செங்கல். மரம், உலோகம், சுதையில்லாமல் நிமாணிக்கப்பட்ட லக்ஷிதாயனம்’ என்று சொல்கிறது. தனக்குட்பட்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட பொருள்களை பயன்படுத்தாமல் வெறும் மலைப் பாறையும், கற்றுளியை மட்டுமே நம்பி கட்டப்பட்ட கோயில் இது. இந்தப் புதுமையைத் தான் செய்ததற்காகவே மகேந்திரபல்லவன் தன்னை விசித்திரசித்தனாக எதிர்கால உலகுக்கு அடையாளம் காட்டிக் கொண்ட கோயில் இது. விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. துர்ரத்தில் பிரியும் மண்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இந்த குகைக் கோயிலை அடையலாம். நான் இரண்டு வருடங்கள் முன் சென்றபோது வழி சரியில்லை. )