மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்
170116991757
நாம் இன்றைக்கு மல்லையில் ஒரு அபூர்வமான இடம் செல்கிறோம். பலரும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு சென்றுவிடும் இடம். அங்கு செல்லும் சிலரும் அங்கு இருந்து தெரியும் அற்புத இயற்கை எழிலை மட்டுமே காண்கின்றனர். சிலர் புதிய கலங்கரை விளக்கத்தை ( அதுவே 1887 வில் நிறுவியது ) படம் எடுக்க இங்கே வருவர்.

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில் – இதை ஏன் அபூர்வம் என்று சொல்கிறோம். இது குடவரை கோயில் அல்ல, கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் , அதுவும் ஒரு சிறு மலையின் மேல். பல காலம் இதை ஆங்கிலேயர் கலங்கரை விளக்கமாக உபயோகித்தனர் !!( padangalukku nanri British Library)
16891686
168016831692
படங்களில் இருந்து இது இருக்கும் இடம் விளங்கும், மகிஷாசுரமர்தினி குகையை அடுத்து உள்ள குறுகிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும்.
17241722
எனினும் இந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது – காற்று மழை, கரி , மனிதன் என்று அனைத்தையும் தாண்டி தன் அருமையான சிற்பங்களுடன் உள்ளது – ராஜ சிம்ஹன் அவனது அழகிய சிங்க தூண்கள், நமக்கு மிகவும் பிடித்த குள்ள பூத கணங்கள், அருமை.
16971703170717511754
நான், திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் மல்லை ( விரைவில் புத்தகமாக வெளி வருகிறது ) படித்தபோது- மேலும் அறிந்தேன்.

17051709
பெயர் காரணம் – வீட்டுக்கு ஒரு உழக்கு எண்ணெய் சேகரித்து, இந்த கோவிலில் அணையா விளக்கு எரியுமாம். அதனால் அதற்கு உழக்கு எண்ணெய் ஈஸ்வரர் கோயில் என்ற பெயர் மழுவி ஓலக்கநெஸ்வர என்று வந்துள்ளது.
1709176517671762
இங்கே மூன்று அபாரமான சிற்பங்கள் உண்டு – ஒன்று தட்சிணாமூர்த்தி, ஆனந்த கூத்தாடும் கோலம் (இதே போல சிற்பம் காஞ்சி கைலாச நாதர் கோவிலும் உண்டு ) மற்றும் கைலாசத்தை அசைக்க முயலும் ராவணனை அடிபணிய வைக்கும் காட்சி. ( நாம் முன்னர் கம்போடியா , எல்லோரா இதே சிற்பம் பார்த்தோம் ) மிக அருமையான சிற்பம் – ஈசனின் தலையில் பிறை , ராவணன் வலியால் வாய் விட்டு இறைவது.
169517161718
பார்க்கும் போதே நெஞ்சம் வெடிக்கிறது

நவீன அரசர்கள் தங்கள் ஆசை நாயகிகளுடன் செய்யும் லீலைகளை ஆயிரம் ஆண்டு சிற்பம் என்றும் பாராமல் கல்வெட்டாக கிறுக்கிய கிறுக்கர்கள், இவர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா.
171117131716

ராவணனின் தலைஎழுத்தை மாற்ற இவர்கள் கைங்கர்யம்.
1845

கலையின் உச்சிக்கு எடுத்து சென்ற பல்லவனின் கலை பெட்டகம் – தமிழன் தலை நிமிர செய்யும் சிற்பம், கலை திறனை கண்டு தலை வணங்கும் வேலைப்பாடு – இதை பார்க்கும் பொது வெட்கி தலை …..

( நன்றி திரு சுவாமிநாதன் – எங்கள் பொன்னியின் செல்வன் குழும நண்பர்களை மல்லை பயணத்தில் கூட்டி சென்றதற்கு, படங்கள் – திரு ஸ்ரீராம், திரு பிளாஸ்டிக் சந்திரா , திரு விஞ்சாமூர் வெங்கடேஷ் )

மல்லை கடற்கரை கோயில் – ஒரு முதற் பார்வை

Flickr.com நண்பர்கள் திரு பிரபாகரன் ( ஆதி ஆர்ட்ஸ் என்ற பெயரில் அவரது அற்புத புகை படங்கள் ) மற்றும் ரவேஜஸ் என்ற பெயரில் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன், நான் உங்கள் அருமையான படங்களை இந்த தளத்தில் இடலாமா என்று கேட்டவுடன், மிகவும் பெருந்தன்மையுடன் – தாராளமாக இடுங்கள் என்று கூறி ஊக்குவித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
1570
மல்லை கடற் கரை கோவில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே – எனினும் அங்கு இருப்பது மூன்று கோவில்கள் என்று பலருக்கு தெரியாது. சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்த காட்சி – தொலைவில் இருந்தே இந்த உன்னத கலை கோவிலின் சிகரங்கள் நம்மை ஈர்க்கும். ஆயிரம் ஆண்டுகள் காற்று, மழை, கடலின் சீற்றம் அனைத்தையும் வென்று பல்லவர் கலை போற்றும் ஒரு அற்புத சின்னம். பொதுவாக எந்த ஓவியம், கட்டடம் போன்ற படைப்புகள் / காட்சிகளில் இருபுறமும் ஒரு சமநிலை வேண்டும் என்று வல்லுனர்கள் கற்றுக்கொடுப்பார்கள் – எனினும் இங்கே ஒரு கோபுரம் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருந்தும், நம் கண்ணில் அதை அழகாக தெரிய வைத்த சிற்ப திறன் அற்புதம் .
15671576
அது என்ன மூன்று ஆலயங்கள் ? முதலில் இருந்த பெருமாள் சிலையை ஒட்டி இரு சிவன் கோவில்கள் பல்லவ காலத்தில் உரு பெற்றன – ராஜ சிம்ஹ பல்லவன், ஒரு அபூர்வமான அரசன் ( அவன் நிறுவிய சாளுவன்குப்பம் புலி குகை நாம் முன்பே பார்த்தோம் – அங்கு இருக்கும் பாயும் சிங்க தூண்களுடன் கடற்கரை கோவில் சிற்பங்களை ஒப்பிடுங்கள் – அவனது மற்றொரு படைப்பான காஞ்சி கைலாசநாதர் கோவில் சிங்கங்கள் ஒரு பார்வையிலேயே அத்யந்தகாமன் என்ற அவன் முத்திரையை பதிக்கும் – வரும் மடல்களில் இவற்றை காண்போம் )
1574

ஒரு புறம் இருப்பது (நாலு அடுக்கு கோபுரம் ) க்ஷத்ரிய சிம்மேஷ்வரா ஆலயம் – மறு புறம் இருப்பது ( மூன்று அடுக்கு) ராஜசிம்மேஷ்வர ஆலயம்.

இவ்விரு சிவ ஆலயங்களின் நடுவில் பெருமாள் – சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளி கண்டருலிய தேவர் என்று வழங்கியது.

திருமங்கையாழ்வார் மல்லைக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்

“புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து

கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”

15721579

இங்கே வரும் தல சயனம் – இதை வரும் மடல்களில் பார்போம்.

கல்லை குடைய வேண்டுமே ?

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை – அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் – மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் – வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) – இதில் நமக்கு ஒரு நல்லது – பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) – அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் – அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.
14671483
148114611463
சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி – அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.
1465147314751477
149114931495
பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி – முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை – கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.
1458148514711479

இப்போது அதன் வெளிப்பாடு – கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.
1487

உத்திரமேரூரில் ஒரு கொடை வள்ளல்

சென்ற ஜூன் மாதம் சென்னை சென்றபோது நண்பர் சந்திரா அவர்கள் ரீச் (REACH Foundation – temple restoration group) உத்திரமேரூர் கைலாசநாத கோவில் பற்றி கூறி அங்கே செல்வோமா என்றார்.ஆஹா ஒரு வாரம் இந்தியா பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என்று ஆவலுடன் சென்றேன்.

அங்கு கண்ட காட்சி ஏன்டா சென்றோம் என்று என்னை இன்று வரை உலுக்கும் என்று அப்போது தெரியவில்லை.

பயணம் இனிதே, எட்டு மணிக்கு புறப்பட்டு பத்து மணிக்குள் சென்றோம், பெருமாள் கோவில் முதலில் சென்றோம். அங்கிருந்து கைலாசநாத கோவில் சென்றோம். பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது, படங்களை மெதுவாக பாருங்கள்… புரியும்.
958961964967970988991994997

10031006100910121015101810211024102710301039
முதலில் பார்த்தபோது எப்போது வேணும் என்றாலும் விழும் என்று இருந்தது கோபுரம் ( brick super structure on a solid granite base ),எனினும் அடித்தளம் கருங்கல், ஆனால் எங்கும் ஒரே குப்பை – துடைத்தோம். எதோ கிறுக்கல் போல தென்பட்டது,கூட வந்த கல்வெட்டு அராய்ச்சியாளர்
உதவியுடன் படித்தோம்…. மேலே முதல் வரி
973976979982985988
ஸ்வஸ்திர்ஸ்ரீ திரு மன்னி வளர இரு நில மடந்தையும் ……ஐயோ முதலாம் ராஜேந்திர சோழன் (1012 AD to 1044 AD) இன்னுமும் கிழே உள்ள இடத்தை சுத்தம் செய்து – படித்தார் ….. தந்தி வர்ம பல்லவன். (around 830 AD)
1073107610701049
973976979982985988
ஆயிரத்தி முன்னுறு அண்டு பழமை -சென்னை அருகில் ( approx 60 kms) -இப்படி ஒரு அவல நிலை. மொழி / மறை – தமிழ் – புழுதியில்.

பலே தமிழா, இந்த பெருமை உன்னை மட்டுமே சாரும்.

ஆனால் இப்போது இந்த கோவிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. REACH FOUNDATION என்ற அமைப்பு இந்த பணியில் முழு மூச்சாக இறங்கி ஆலயத்தை செவ்வனே புதுபித்து வருகிறது. இதற்கு நன்கொடைகள் பல தேவை . முடிந்தால் உதவுங்கள். இதோ நமக்கு ஒரு முன்னோடி. சாதாரண மனிதர், தனது நிலத்தை விற்று பணத்தை கொடை செய்த வள்ளல்.இவர் போல இன்னும் பல நல்ல நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.
955
http://www.conserveheritage.org/

இது மானுட வேலைபாடா

கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.

மல்லை பூனை, சைவ பூனையோ

மல்லை பகிரத பிரயத்தனம் காட்சியில் அடி புறத்தில் வரும் ஒரு சுவாரசியமான காட்சி
921934
– ஒரு கால் தூக்கி தபஸ் செய்யும் பகிரதன் ( அல்லது அர்ஜுனணன்) – அவனை பின் தொடரும் ஒரு பூனையும் அவனை போல் தபஸில் உள்ளது –
926929
அந்த பூனை செய்யும் பொய் தபஸில் ஏமார்ந்து தனது ஜென்ம எதிரியை துதிக்கும் எலி….. பூனையின் தவம் கலைந்தந்தும் என்ன ஆகும்…. அது சைவ #######பிள்ளை##### மன்னிக்கவும்
பூனையோ.
924932

மல்லை தவம் – யானைகள் ஒரு பார்வை

863841
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தங்கள் எழில் குறையாமல் இருக்கும் இவை அருமை. இவை அப்போது ( வடிவமைக்க பட்டவுடன் ) என்ன அழகுடன் இருந்திருக்கும் – இல்லையேல் ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் இவற்றுக்கு அழகு கூடுகிறதா??
855857859861
839
யானைகளின் மடிந்த காது, பின்னால் செல்லும் ( பெரிய) யானையின் வளைந்த துதிக்கை, ஒரு படத்தில் ( யானைகளின் முன்னால் இருந்து ) பாருங்கள் – யானை தலை மண்டை அமைப்பு ( குறிப்பாக இரண்டாம் யானையின் மண்டை – அழகாக இரு பிளவுகளுடன் ) – என்ன கம்பீரம் , இரு பெரிய யானைகளின் கால்களுக்குள், மற்றும் பின்னால் விளையாடும் குட்டி யானைகளின் அங்க அசைவுகள்…படத்தில் சூரிய வெளிச்சம் மற்றும் சிலையின் நிழல் செய்யும் விளையாட்டு – உயிரோட்டம்.
859865

இருக்கும் சிலை மிருகங்கள் போதாதென்று உயிர் ஆடுகள் வேறு. ( சிலையின் அளவை குறிக்க உதவுகிறது )
846849
( this picture is from a friend)
மல்லை சிற்பிகள் எந்த அளவிற்கு கலை வல்லுனர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இணைத்துள்ள யானை படத்துடன் சிர்ர்பங்களை ஒப்பிடுங்கள்
836859
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

என்னும் சீர்காழியின் வெங்கலக் குரலில் பாட்டு காதிலே ஒலிக்கிறது ( நன்றி திரு தமிழ்த்தேனீ ஐயா )

மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….

மல்லை தவம் ..முதல் பார்வை

எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் – ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் – நிறைய விளக்கம் இல்லை – நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்

மல்லையில் ரதங்களின் நடுவே யானை என்ன செய்கிறது ?

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் – பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.

 

இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?

சரி படங்களை பாருங்கள்…

542

 

முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..

 


இந்த பக்கம்…

சரி அந்த பக்கம்……

 

 

 

கொஞ்சம் அருகில் சென்று

இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.


சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ – யானை , ப்ரிஷ்டம் – முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…