ஓர் ஆயிரம் பார்வையிலே !

 

சித்திரம் – சிலை – இரு தெய்வீக கலைகள் – இவை இணையும் போது வார்த்தைகள் நிற்கின்றன. (கோனார்க் கோவில் சிலையை கண்டு தாகூர் Here the language of stone surpasses the language of man என்று கூறினார்). இங்கே உள்ள படைப்பை அவர் பார்க்கவில்லை ..பார்த்திருந்தால் !!

 

 

எல்லோரா குடவரையில் ….இந்த அறிய சிலைஒவியம் பாருங்கள் – ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், மங்கி சிதைந்தும் அந்த ஒரு கண்ணில் எத்தனை ஈர்ப்பு சக்தி.. அப்பப்பா மெய் சிலிர்க்கிறது. ரிஷப சிவன்

ஊடல், கூடல், காதல்

ஊடல் கூடல் காதல் என்பார்கள்.. … சிவபெருமானின் அழகிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.

 

 

 

 

சிவகங்காதரா என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் – இதனை கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம்.

 

 

 

திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.( அது லலிதாங்குர பல்லவ க்ரிஹம் …ஆ!! அதையும் நாம் பின்னர் பார்போம் )

 

தன் வலது கையால் தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம் – திருச்சி வடிவம் இதுவே… ஆனால் நமது சிற்பி ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

மற்ற படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/gkchopu/images/vimsta/viar16.jpg

எங்கும் சாந்தி நிலவ வேண்டும்

ஈசனின் பல தாண்டவ கோலங்கள் உண்டு – பொதுவாக அழிவை கொண்டே இத்தண்டவம் என்ற கருத்து உலாவி வருகிறது – ஆனால் அது தவறு …ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தே அது. எந்த ஒரு ஆரம்பதிர்க்கும் ஒரு முடிவு வேண்டும் – அம்முற்றுப்புள்ளியே அடுத்த ஆரம்பத்தின் அறிகுறி

ஓர் அரிய எல்லோரா சிற்பம்…. சிதைந்த நிலையிலும் சிற்பத்தினுள் இருக்கும் உணர்வு இன்னும் நமக்கு தெரிகிறது – கலை அழகும் தெய்வீகமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன ….இங்கே மானிட அறிவும் கலைவண்ணமும் ஒரு உன்னத நிலையை அடைகின்றன… நாம் உடலை வளைத்து உழைக்கும் போது முகத்தில் வருவது சலிப்பு – ஆனால் இந்த சிலையில் தெரிவதோ ஒரு பரவச நிலை. அதை உணர்த்த ….தன்னை சுற்றிலும் இருக்கும் அழிவையும் தாண்டி வையகத்தில் என்றும் ஆனந்தம் நிலவுவதை உணர்த்தும் வண்ணம் இருக்கும் இந்த சிலை கண்டு கண்கள் கண்ணீர் வடிகின்றன ..

மலைமகள் நடுங்க !

ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. …. இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.

 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

 

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.

 

 

 

 

ஒருவளை திருமுறையின் தாக்கம் அங்கும் பரவி இருக்குமோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2091&padhi=091&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவ பிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.

 

உமையும் பயத்தில் ( ஆஹா மலைமகள் நடுங்க….இங்கே வருகிறான் சிற்பி )ஈசனின் மடியில் தாவி அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.