நான் பெரியவன் – என்னைவிட பெரியது – தஞ்சை பெரிய கோவில் இரண்டாம் பாகம்

சரி, முந்தைய மடலில் பெரிய கோவில் ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்தோம். பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மரின் தாக்கத்தில் சற்று நிறைய எழுதி விட்டேன்.
1409
தொலைவில் இருந்து பார்த்தோம். இப்போது நெருங்கி செல்வோம், ஆனால் ஒரு மாற்றம். உங்கள் கண்களை கட்டி, அழைத்து போகிறோம். முதல் வாயில் – இது சோழர் காலத்தில் கட்ட பட்டது அல்ல – அடுத்து காந்தளூர் சாலையில் ராஜ ராஜன் பெற்ற வெற்றியை குறிக்கும் கோபுரம் – கேரளாந்தகன் வாயில் – அதையும் இப்போதைக்கு தாண்டி செல்வோம். அடுத்து அரசனாக பதவி ஏற்கும் பொது அவன் சூடிக்கொண்ட பெயரால் விளங்கும் வாயில் – ராஜ ராஜன் வாயில் – இங்கே உங்கள் கண் கட்டை சற்று அவிழ்த்து விடுகிறோம்.

1330

இது என்ன – வாயில் காப்போன் – ( த்வார பாலகன் ) – கோரைப் பல்,பிதுங்கும் கண்களுடன் உங்களை எதிர் கொல்லும்.
13491352
13611363
13651359
1430

நான்கு கரங்கள்,காலை உயர்த்தி,அது என்ன காலின் அடியில்,ஒரு சிங்கம்,சரி இது என்ன ஒரு பாம்பு,சரி பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக
யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதை முழுங்கும்
பாம்பு (anai kolran…anaconda ??),அது எவ்வளவு பெரியது,இப்போது
வருகிறது பாடல்.எப்படி கொர்கிறான் பாருங்கள் சிற்பி.
1498
1399140113741443

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1068&padhi=068&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.68.2

புரிகொள்சடையர் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பெரிய களிற்று யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை
மலையில் விடம் உண்ட கரிய கண்ட ராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும்
இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர்.
கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

1365
இப்போது மேலிருக்கும் துவரபாலகன் கைகளை கவனியுங்கள்,கீழே பார்,யானையை முழுங்கும் பாம்பு,அதை விட நான் எவ்வளவு பெரியவன், ஜாக்கிரதை,உள்ளே இருப்பவரோ,விஸ்மயம் ( சொல்ல நாவில்லை என்று அந்த கற் சிலை தனது கையால் விளக்கும் அழகு )

பெரிய கோவில் துவாரபாலகர்கள் ( வாயிற்காப்போன்) அல்லவா, இதை எப்படி உங்களுக்கு உணர்த்துவது – சரி படத்தில் ஒரு ஆளை, இல்லை ஒரு யானையை கொண்டு வருவோம் – இப்போது புரிகிறதா – பதினெட்டு அடி உயரம் உள்ள இவர்கள்.
13701372
1357
13851391
1388
ராஜ ராஜன் நிறுவிய தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜெஷ்வரம், பெருவுடையார்
கோவில் என்று அவனே அழைத்த, பிருகதீஸ்வரர் ஆலயம்.

அவன் இதனை தக்ஷின மேரு என்று கண்டான், தக்ஷின கைலாசம்,இதனாலேயே
இங்கு விமானம் கோபுரத்தை விட உயரமாக உள்ளது ( மற்ற ஆலயங்களில்
கோபுரம் விமானத்தை விட உயரமாக இருக்கும் )

விமானத்தை கைலாயம் என்று உணர்த்துகிறான் பார்த்தீர்களா….( திரு
K. பாலு ஐயா அவர்கள் இதனை எனக்கு மிக அழகாக விளக்கினார்)

எப்படி ஒரு சிறு சிலை வடிவம் – ஒரு பெரும் தத்துவத்தை விளக்குகிறது பாருங்கள்..

சரி இப்போது மற்ற படங்களை பாருங்கள்

முதல் கோபுரம்
134114141417
இரேண்டம் கோபுரம் – கேரளாந்தகன் வாயில்
13761379
மூன்றாம் கோபுரம் – ராஜ ராஜன் வாயில்
14341436
முடிவில் மகா மேரு விமானம் – விமானத்தை பற்றி பல தகவல் உண்டு – அவற்றை விளக்க நாம் மீண்டும் அங்கே செல்வோம். அதுவரை படங்களை பாருங்கள் – அவ்வப்போது படங்களுள் வரும் மனிதர்களை வைத்து இந்த கோவிலின் பெயர் ஏன் பெரிய கோவில் என்று வந்தது என்பது உங்களுக்கு புரியும்.
1332150013361339134613441367139714031412142014231425142814381445

(படங்கள் தந்து உதவிய நண்பர்கள் மற்றும் திரு ரோகன் ராவ் அவர்களுக்கு நன்றி
http://rohanrrao.wordpress.com/ )

இதோ தஞ்சை பெரிய கோவில் – முதற் பாகம்

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் – அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் – இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு – ஈசலம் – திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி – நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் – கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று – அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.
1324
தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் – வெளி வாயில் கோபுரம் – பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் – எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது – ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் – அடுத்த மடலில்

பெரிய கோவில் – சிறிய சிற்பம்

நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் – இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி – தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் – நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
1173
நிறைய நபர்கள் – புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை
1165
இங்கே சிவ பூத கணங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு – ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் – கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் – இரண்டாம் தளம் – இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை – மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )
11631169
806
அடுத்த காட்சி – இருவருக்கும் யுத்தம் – அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை
11761178
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை. 1192
1167
அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??
1196
அடுத்த மேலும் சில தெய்வங்கள் – இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் – இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் – அடுத்து உமை – அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் – அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.
11711182
அடுத்து – அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி – என்ன உயிரோட்டம்.
1180
கடை தளம் – இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது – வியாசர் விருந்தோ ? 11601307

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் – பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு – கொம்பு. மால் – பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு – பெருமை.

ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து

சோழ சிற்பியின் அபார திறமையை போற்றி ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் ஜோதி ரூபமான அவனின் ஆடல் உருவம் இந்த சட்டங்களுக்குள் வந்து ஆடுவது போலவே உள்ளது …..ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து …. தஞ்சை பெரிய கோவில் சிற்பம்.. பல கோணங்கள்…

 

சுயன்று ஆடும் அவனின் சுயர்சியை காட்ட கழுத்தில் இருக்கும் பாம்பு நழுவி கையில் தொங்கிக்கொண்டு இருப்பதை பாருங்கள் ..அந்த பாம்பின் சுயல்களில் தான் என்ன ஒரு உயிரோட்டம் ….இடையில் இருக்கும் உடுப்பும் அது போலவே பறந்து அவன் சுயன்று சுயன்று ஆடுவதை வெளி கொணர்கின்றன … அந்த .உடைகளில் தான் என்ன அழகிய வண்ணங்கள்.. ஒரு காலில் நின்று ஆடும் போதும் என்ன ஒரு வலிமை என்ன ஒரு ஒரு நளினம் ..சிற்பியின் வேலைப்பாடு ஒவ்வொரு அங்க அசைவையும் காட்டும் விதத்தில் உள்ளது

 

பிரமனுக்கு இரவாகும்பொழுது இயற்கை சலிக்காது. சிவபெருமான் அருளினால் ஒழிய இயக்கம் இல்லை. அவன் கழிப்பேருவகை கொண்டு ஆடும்போது சடப் பொருள்கள் மூலம் துயில் நீங்கி எழும் ஒலி அலைகளை வாரி இறைக்கிறான். அசையாத பொருள்களும் அசைந்து அவனை சுற்றி ஒளிக்கற்றைகளை பரப்புகின்றன. ஆடிக்கொண்டே அவன் பல்வேறு தொழில்களை நடத்துகிறான். முடிவு காலம் நெருங்கியதும் எல்லாவற்றையும், உருவங்களையும் நாமங்களையும் – தீயால் சுட்டெரித்து, அவைகட்கு ஓய்வு கொடுக்கிறான். இது கவிதை. இம்மி குறைவின்றி விஞ்ஞானமும் கூட.

– ஆனந்த குமாரசுவாமி.

தந்தை காலை வெட்டியதற்கு பரிசு, கொன்றை மாலை

அமெரிக்கா நண்பர் ஒருவர் இந்த படத்தை அனுப்பி( தஞ்சை பெரிய கோவில் சிற்பம்), இது என்ன சிற்பம், கிருஷ்ணா லீலையா(கம்ச வதமா) என்று கேட்டார்.

இந்த சிற்பத்தின் மிச்சம் இரு காட்சிகள் உண்டு — இப்போது படங்கள் இல்லை – கிடைத்தும் இடுகிறேன். மூன்று காட்சிகளை கொண்ட படத்தின் நாடு காட்சி இது. இது சண்டேஸ்வரர் கதை…..சிவாலயங்களில் அனைத்து சொத்துக்களுக்கும் இவர் பெயராலேயே பதிவு செய்யப்படும். இவரது கதை மிக விநோதமானது. சிற்பத்தில் ஒருவர் தடி கொண்டு மற்றொருவரை அடிப்பது போல உள்ளது. அடிப்பவர்தான் சண்டேஸ்வரர், அடி வாங்குபவர் அவரது தந்தை ???

 

இவரை பற்றி ஞானசம்பந்தர் இவ்வாறு பாடுகிறார்.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே

 

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தி யான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித் தருளியதை அறிவுசால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

 

இவரது இயற் பெயர் வீசாரசர்மன். பிறப்பிலேயே சிவநெறி / சிவ பக்தி மிகுந்த குழந்தை ….நண்பர்களுடன் ஒருநாள் விளையாடும் போது பசுமாட்டை பராமரிக்கும் ஒருவன் அவற்றை அடிக்கிறான் – இதில் சினம் கொண்டு அவனை சபித்து , இனி நானே பசுக்களை கவனித்து கொள்கிறேன் என்று சிறுவன் கூற, அவனது அன்பான அரவணைப்பில் பசுக்கள் எல்லாம் மிக அதிகமாகவே பால் கறக்கின்றன. ….. பசுக்களின் உரிமையாளருக்கு கொடுத்த பின்னும் பால் மிச்சம் இருக்கிறது…. அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.

 

அப்போது பக்தி நிலையில் வீசாரசர்மன் ஆற்று மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்து அதற்க்கு மிச்சம் இருந்த பால் கொண்டு அபிஷேகம் செய்கிறான். இதை மூடன் ஒருவன் வீசாரசர்மனின் தந்தை இடத்தில் கூற, அவரும் உண்மையை அறிய அடுத்த நாள் வீசாரசர்மனை பின் தொடர்கிறார்.

 

பாலை மண்ணில் இடுவதை கண்டு அவனது பக்தியை அறியாது – கூச்சல் இடுகிறார் (தஞ்சை பெரிய கோவில் சிற்பத்தின் முதல் காட்சி இது – படம் இல்லை மன்னிக்கவும் ) … ஒரு கம்பு கொண்டு ஓங்கி முதுகில் இடுகிறார் – பக்தி நிலையில் வீசாரசர்மன் இதை உணரவில்லை ….. எனவே பால் குடத்தை காலால் இடருகிறார் – அப்போது சினம் கொண்ட வீசாரசர்மன் தந்தை என்றும் பாராமல் பக்தி பரவசத்தில் அருகில் இருக்கும் தனது மாடு மேய்க்கும் கொலை எடுத்து தனது தந்தையின் காலின் மேல் எறிகிறான். அது மாயமாக கோடரி ( மழு ) யாக மாறி அவரது காலை வெட்டியது.

 

உடனே எம்பெருமான் சிவ பூஜைக்கு இடையூறு விளைவித்தது தந்தை என்றும் பாராமல் அவரை தண்டித்த வீசாரசர்மன் தனது மகனாகவே பாவித்து … அந்த தூய பக்திக்கு பரிசாக தனது விரிசடையிலிருந்து கொன்றை மாலையை எடுத்து சண்டேகேஸ்வரருக்கு அணிவித்தார்.

நண்பர் திரு ஸ்ரீவத்சன் அவர்கள் சற்று முன்னர் இந்த முழு சிற்பத்தின் படத்தை அனுப்பி நாங்கள் இந்த தளத்தை உருவாக்க முக்கிய குறிக்கோள் ஒன்றை வெற்றி பெற செய்தார். அவருக்கு எங்கள் மனமார்த்த நன்றி..இதேபோல் பலரும் தங்கள் படங்களை தந்து இந்த தளத்தை இன்னும் அழகு செய்ய மீண்டும் எங்கள் வேண்டுகோள்.
1184

இந்த சிற்பத்தை கிழ் இருந்து மேல் பார்க்க வேண்டும். முதலில் சண்டேசர் மெய்த மாடுகள், இரண்டாவது அவர் தனது தந்தையை தாக்கி உள்ளார், தந்தை கீழே விழுந்து விட்டார், அதற்க்கு மேலே – ஈசனின் அருளை மெரும் சண்டேசர்

அந்த சிற்பத்தை மிகவும் அழகாக ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் நிறுவினான்…..சிலர் இந்த சிற்பம் ராஜேந்திரன் கங்கை வெற்றிகளை சிவபெருமானின் கரத்தால் வெற்றி மாலை பெறுவது போல் அமைத்தது என்று கூறுகின்றனர்.( அகிலனின் வேங்கையின் மைந்தன்..) அப்பா என்ன ஒரு அபாரமான சிற்பம்…ஒவ்வொரு முகமும் அருமை…அடி பணியும் பக்தன்…ஆட்கொள்ளும் கடவுள்..அருளிக்கும் அன்னை

880
735
877
883
869