அது என்ன எல்லோரா கைலாசநாத கோவில் – மூன்றாம் பாகம்

சென்ற மடலில் யானைகள் மற்றும் மற்ற பிராணிகள் அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ? என்று வினவினோம் அல்லவா. அதற்கு விடை..

1239
1241
1223
முதலில் அந்த படங்களை இன்னொரு முறை பார்போம்.
1207
1251
120012751203
அங்கிருந்து சற்று மேல்நோக்கி பார்வையை செலுத்துவோம் …
1213
1257
1273

இப்போது புரிகிறதா ? அந்த குடவரை அனைத்தையும் தங்கள் முதுகில் சுமப்பது போல செதுக்கி உள்ளனர்.

சரி அந்த குடவரை எவ்வளவு பெரியது, அதன் முழு வேலைபாடு என்ன – இதை வி்ளக்க எனக்கு நா வரவில்லை – என்ன வார்த்தை இட்டாலும் இதற்கு இணை செய்யா இயலவில்லை – படங்களையே பேச விடுகிறேன்
12091211121512171219122112251227
சற்று நிதானத்துடன் பார்த்து பரவசம் அடையுங்கள்…ஆயிரம் ஆண்டு, அப்போது இருந்த தொழில் நுட்பம் – ஒரு மலையின் பாகத்தை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை – மேல் இருந்து கீழ் செதுக்க வேண்டும். அனைத்தும் ஒரே மலை – ஒரே கல்.
1229123112331235123712451247124912531255
12591261126912711277127912811283128512871289
12911293129512971299130113031305
கடை சிற்பத்தில் ஒரு காவியத்தின் கதை செதுக்க பட்டுள்ளது – அதை பின்பு பார்போம்.

அது என்ன எல்லோரா கைலாசநாத கோவில்?- இரண்டாம் பாகம்

முன்பு நாம் எல்லோரா கோவில் ஒரு தொலைவு பார்வை பார்த்தோம். அப்போது ஒரு மலையை எவ்வாறு அருமையாக குடைந்தார்கள் என்பதை கண்டோம். இப்போது சற்று அருகில் சென்று அந்த உன்னத வேலைபாடின் அருமையை முழுவதுமாய் உணர பயணிப்போம். அதற்க்கு முன் சற்று உங்கள் பணிகளை சிறிது நேரம் விட்டு விடுங்கள் – முடிந்தால் உங்கள் இருக்கையில் சரியாக அமருங்கள் ( நீங்கள் பார்க்க போகும் படங்கள் உங்களை அப்படியே மயங்கி சொக்கி விழ செய்யாலம் )
1239
நீங்கள் இங்கே பார்க்கும் அழகிய யானை – அதன் மண்டையின் பிளவுகள் மற்றும் துதிக்கை, அதன் வளைவு – அது என்ன இயற்கையாய் சில கொடிகளை சுயற்றி பிடித்திருக்கும் கோலம் ..அதன் காதுகள் , சற்றே வளைந்து மடிந்த காது மடல்.
1241
சற்று, பின்னால் செல்வோமா – ஆஹா, இன்னும் ஒரு யானை, ஆனால் இயற்கையின் சீற்றத்தால் உடைந்து உள்ளது…
1223
சரி இன்னும் பின்னால் செல்வோமா- அடே அப்பா – இது என்ன யானைகளின் அழகிய அணிவகுப்பு.
1207
இன்னும் பின்னால் செல்வோம் – அப்பாடா இதன் உண்மையான அளவு அருகில் செல்லும் மனிதனின் உயரத்தை வைத்து கணக்கிட முடிகிறது. இப்போது புரிகிறதா இந்த கலை நுட்பத்தின் அபாரத்தை.
12001203
சரி, மற்ற இடங்களில் யானைகளுடன் சிங்கங்கள் மற்றும் யாழிகளும் உள்ளன. பொழுது போகவில்லை என்று யானையுடன் சிங்கம் சண்டை போடுகிறது போல.
1243
சரி, இவை அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ?? தொடரும்

அது என்ன எல்லோரா சிற்பம் ?

எல்லோரா கைலாசநாதர் கோவில் சிற்பங்கள் உலக புகழ் பெற்றவை . நண்பர் ஒருவர் அது என்ன எல்லோரா சிற்பம் – அதற்கு என்ன தனி மதிப்பு என்றார்… குடவரை என்றாலே சிறப்புதான் – அதுவும் இது மலைவரை …..புரியவில்லையா …. எல்லோரா ஒரு மேலோட்ட பார்வை பாருங்கள் விளங்கும்.

 

 

இங்கே நாம் பல முறை வருவோம்….

 


 

ஆனால் இதே போல் தமிழகத்திலும் ஒரு இடம் உண்டு – கழகு மலை. அதை பின்பு பார்போம்….

அஜந்தாவில் அப்படி என்ன உள்ளது ?

எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது


 

அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் – ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்

அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை – காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???

 

ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….

மலையை குடைந்தான், எனினும் நினைவில் மறைந்தான்

[lang_ta]

கழுகுமலை …. இது எங்கே உள்ளது – தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். எல்லோரா படம் பார்த்தீர்கள் அல்லவா … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…

 

இப்போதைக்கு மேலோட்ட பார்வை தான்….. மலையில் பல ஜீன சிற்பங்கள் உள்ளன. அடிவாரத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட வேட்டுவன்கொவில்..

பார்த்து நெகிழுங்கள்.. பாண்டிய குடவரை கோவில் …ஒரு சாதாரன மலையை குடைந்து ஒரு கலை பெட்டகத்தை நிறுவிய இந்த கலைஞர்கள் அமரர்கள் ….. இந்த அறிய பொக்கிஷம் நமது சரித்திரத்தில் இருந்து மறைந்து விட்டது…பல தமிழிருக்கே தெரியாத அவல நிலை….மாண்டவர் மீண்டும் வருவாரோ… அது போல இதுவும் ஒரு அழிந்த கலை ….இந்த திறமைகள் அழிந்து விட்டன …. இனி சிற்ப கலை மீலாது…..இது போன்று இன்னொன்று கட்ட இயலாது.

மல்லையில் ரதங்களின் நடுவே யானை என்ன செய்கிறது ?

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் – பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.

 

இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?

சரி படங்களை பாருங்கள்…

542

 

முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..

 


இந்த பக்கம்…

சரி அந்த பக்கம்……

 

 

 

கொஞ்சம் அருகில் சென்று

இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.


சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ – யானை , ப்ரிஷ்டம் – முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…

இந்த கதை, கதையல்ல, நிஜம்

கல்யாண சாப்பாடு என்றாலே நமக்கு நினைவில் வரும் பாட்டு ….மாயா பஜார் …ரங்கா ராவ் அருமையான நடிப்பில் …கல்யாண சமையல் சாதம் பாட்டு …அதில் அவருடைய கதை …..கதை என்றவுடன்…பீமன், துரியோதனன் மற்றும் யமதர்மனின் கதைகளும் நினைவுக்கு வரும்..பல படங்களில் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய கதை உண்மையிலே இருக்குமா , அதை ஒருவனால் எடுத்து சுயற்ற முடுயுமோ …இல்லை இவை கற்பனையோ என்று வியந்ததுண்டு… இதற்க்கு சிற்பத்தில் விடை காண முற்பட்டபோது சென்னை நண்பர், புகை பட வல்லுநர் அசோக் கிருஷ்ணசாமி அவர்கள் நேற்று அனுப்பிய மாங்காடபத்து குடவரை கோவில் படங்கள் உதவின…இது விசித்ர சித்தன் என்ற பெயர் கொண்ட மஹேந்திர பல்லவனின் வேலை….

 

பார்ப்பதற்கு தண்டால் எடுக்கும் கட்டை போல இருக்கும் இவை அப்பப்பா… இதில் ஒரு போடு போட்டால் கபால மோட்சம் தான் ……இந்த அசுர கதையை அசால்டாக ( assaulta ) மன்னிக்கவும் அலட்சியமாக கொண்டு, வாய் பிளந்து பார்க்கும் நம்மை கண்டு ‘"போடி பயலே" என்று சிரிக்கும் இவ்விரு மஹா வீரர்கள் என்ன கம்பிரமாக நிற்கின்றனர் 

 

 

.அந்த கதையை ஒரு படம் எடுக்கும் நாகம் வேறு சுற்றயுள்ளது…. இவர்கள் இப்போது எங்கே போனார்கள்… இப்போது இருந்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கம் இவர்களுக்கே….. ( திரு திவாகர் சார் …. அவர் எழுதிய விசித்திரச் சித்தன் சரித்திர புதினம்…அருமை…அவர் இந்த படத்தை பார்த்தவுடன் எழுதிய குறிப்பு. .. விசித்திரச் சித்தன் பாறையைக் குடைந்து மும்மூர்த்திகளுக்கான சிவ-விஷ்ணு-ப்ரம்மாவுக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. அற்புதமான கலைப் படைப்பு. பல்லவ அரசனின் கல்வெட்டு சமுஸ்கிருதத்தில், பல்லவ கிரந்த எழுத்தில் ‘பிரம்ம,ஈஸ்வர விஷ்ணுவுக்காக செங்கல். மரம், உலோகம், சுதையில்லாமல் நிமாணிக்கப்பட்ட லக்ஷிதாயனம்’ என்று சொல்கிறது. தனக்குட்பட்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட பொருள்களை பயன்படுத்தாமல் வெறும் மலைப் பாறையும், கற்றுளியை மட்டுமே நம்பி கட்டப்பட்ட கோயில் இது. இந்தப் புதுமையைத் தான் செய்ததற்காகவே மகேந்திரபல்லவன் தன்னை விசித்திரசித்தனாக எதிர்கால உலகுக்கு அடையாளம் காட்டிக் கொண்ட கோயில் இது. விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. துர்ரத்தில் பிரியும் மண்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இந்த குகைக் கோயிலை அடையலாம். நான் இரண்டு வருடங்கள் முன் சென்றபோது வழி சரியில்லை. )