உத்திரமேரூரில் ஒரு கொடை வள்ளல்

சென்ற ஜூன் மாதம் சென்னை சென்றபோது நண்பர் சந்திரா அவர்கள் ரீச் (REACH Foundation – temple restoration group) உத்திரமேரூர் கைலாசநாத கோவில் பற்றி கூறி அங்கே செல்வோமா என்றார்.ஆஹா ஒரு வாரம் இந்தியா பயணத்தில் நமக்கு இப்படி ஒரு அதிஷ்டமா என்று ஆவலுடன் சென்றேன்.

அங்கு கண்ட காட்சி ஏன்டா சென்றோம் என்று என்னை இன்று வரை உலுக்கும் என்று அப்போது தெரியவில்லை.

பயணம் இனிதே, எட்டு மணிக்கு புறப்பட்டு பத்து மணிக்குள் சென்றோம், பெருமாள் கோவில் முதலில் சென்றோம். அங்கிருந்து கைலாசநாத கோவில் சென்றோம். பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது, படங்களை மெதுவாக பாருங்கள்… புரியும்.
958961964967970988991994997

10031006100910121015101810211024102710301039
முதலில் பார்த்தபோது எப்போது வேணும் என்றாலும் விழும் என்று இருந்தது கோபுரம் ( brick super structure on a solid granite base ),எனினும் அடித்தளம் கருங்கல், ஆனால் எங்கும் ஒரே குப்பை – துடைத்தோம். எதோ கிறுக்கல் போல தென்பட்டது,கூட வந்த கல்வெட்டு அராய்ச்சியாளர்
உதவியுடன் படித்தோம்…. மேலே முதல் வரி
973976979982985988
ஸ்வஸ்திர்ஸ்ரீ திரு மன்னி வளர இரு நில மடந்தையும் ……ஐயோ முதலாம் ராஜேந்திர சோழன் (1012 AD to 1044 AD) இன்னுமும் கிழே உள்ள இடத்தை சுத்தம் செய்து – படித்தார் ….. தந்தி வர்ம பல்லவன். (around 830 AD)
1073107610701049
973976979982985988
ஆயிரத்தி முன்னுறு அண்டு பழமை -சென்னை அருகில் ( approx 60 kms) -இப்படி ஒரு அவல நிலை. மொழி / மறை – தமிழ் – புழுதியில்.

பலே தமிழா, இந்த பெருமை உன்னை மட்டுமே சாரும்.

ஆனால் இப்போது இந்த கோவிலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. REACH FOUNDATION என்ற அமைப்பு இந்த பணியில் முழு மூச்சாக இறங்கி ஆலயத்தை செவ்வனே புதுபித்து வருகிறது. இதற்கு நன்கொடைகள் பல தேவை . முடிந்தால் உதவுங்கள். இதோ நமக்கு ஒரு முன்னோடி. சாதாரண மனிதர், தனது நிலத்தை விற்று பணத்தை கொடை செய்த வள்ளல்.இவர் போல இன்னும் பல நல்ல நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.
955
http://www.conserveheritage.org/

ஒரு கல்லின் மறுபக்கம்

மல்லை சாளுவன் குப்பம் ஒரு கலைபெட்டகம். நாம் முன்பு புலி குகை பார்த்தோம். அப்போது அங்கு இன்னும் இரெண்டு பொக்கிஷங்கள் உண்டு என்று கூறினேன்.

அவை, சிறு சிற்பம் என்றாலும் மிக அழகிய மகிஷாசுரமர்தினி மற்றும் அதன் அருகில் இருக்கும் குடவரை கோவில் (அதிரணசண்ட மண்டபம் -அதில் உள்ள ராஜ சிம்ஹன் கல்வெட்டு. அதை பிறகு பார்போம்.)

அந்த குடவரைக்கு முன் ஒரு சிறு கல் இருப்பதை பலரும் பார்ப்பதில்லை.

1156
அங்கு சென்று கல்லின் பின்புறம் பார்த்தல் ஒரு சிறு அற்புத மகிஷாசுரமர்தினி சிலைகோர்ப்பு இருப்பதை காணலாம்.
11241128
இதன் விநோதம் என்னவென்றால் – மல்லையில் இருக்கும் புகழ் பெற்ற இதே கதையின் ( மகிஷாசுரமர்தினி ) அடுத்த நிகழ்ச்சியை குறிக்குமாறு செதுக்கி உள்ளனர்.
1146
உற்று பாருங்கள் – மல்லை சிலையில் – மகிஷன் கையில் கதையுடன் சிங்கவாகனத்தின் மேல் இருக்கும் அன்னையை எதிர்கொள்ளும் கோலம்.
11421144
இங்கோ துவம்ச யுத்தத்தின் பின் சோர்வடைந்து கிழே விழுந்து இருக்கும் மகிஷன் ( சிறு வடிவமாக இருப்பினும் சோர்வில் அசுரனின் நாசி விரிந்து பெருமூசிடுமாறு உள்ளது ) – யுத்தத்தில் வெற்றி கொண்ட தேவி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும் கோலம்
மல்லை துர்கைக்கு எட்டு கைகள் – சாளுவன் குப்பம் துர்கைக்கு ஆறு கரங்கள்தான் உள்ளன.
113011321134
11371139
– அபாரம்.

விட்ட குறை – தொட்ட குறை

ஸ்ரீரங்கம் அழகிய தூண்கள் பற்றிய மடல்களை அனைவரும் கண்டு ரசித்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து ஒரு விந்தை நடந்தது. புதிய நண்பர்கள் இருவர் – ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாதவர், உலகில் இரு கோடியில் இருப்பவர். இருவரும் இதே தூண் சிற்பத்தை வரைந்துள்ளனர். இது தான் கலையின் வெற்றி, எங்கோ உறங்கிக்கொண்டு இருக்கும் நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி, விட்ட கொறை தொட்ட கொறை என்று சொல்வது போல, நம்மையும் ஒரு கலை ரசிகனாக மட்டும் அல்லாமல் கலைஞனாகவே மாற்றும்.

ஒரு கலைஞனுக்கு தன் படைப்பில் உள்ள அழகை தான் மட்டும் இல்லாமல் பலரும் ரசிக்க காண்பதே ஊதியம் ….இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த சிற்பிக்கு இவ்விருவர் மட்டும் அல்லாமல் நாம் அனைவரும் தரும் கூலி – அவனின் உன்னத கலையை ரசித்து நெகிழ்வது.

திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஓவியம்
http://raga-artblog.blogspot.com/2008/09/srirangam.html
1097
1111
1106
திரு ஸ்ரீராம் ராஜாராம் அவர்களின் ஓவியம்
http://album-photo.geo.fr/ap/album/6945/?pos=1&order=InsertDate
1101
1109

இது மானுட வேலைபாடா

கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.

வாலி வலிமை சாலி

திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு – ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )
914
படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் – இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் – இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.
917
அதே கதை தான் – பாத்திரங்கள் இப்போது புரிகின்றன – சிவ லிங்கம், வணங்கும்
வாலி – வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?

வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு – அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட – ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது – இது வாலிக்கு தெரியகூட இல்லை – அவனுக்கு அவ்வளவு வலிமை – அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.

சிற்பியின் திறன் பாருங்கள் – வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை – அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.

எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…

thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm

கல்லை மட்டும் கண்டால் ..கண்முன்னே சிலை திருட்டு

நாளிதழ்களில் அவ்வப்போது சிலை திருட்டு பற்றி படித்துள்ளேன். ஆனால் இந்த படங்களை பார்த்த பின்னர் நானே சிதைந்து போனேன்.
938

புகழ் பெற்ற இந்த இடம் கம்போடியாவில் உள்ள கபால் சிபியான் என்ற இடம். இங்கே ஆயிரம் லிங்கம் உள்ள அருவி உண்டு… ஜல சயன பெருமாள் சிற்பம். என்ன அருமையான வேலைப்பாடு – ஒரு காட்டின் நடுவில் ரம்மியமான சௌந்தர்யத்தில் இயற்கை எழில் கொஞ்ச கொட்டும் அருவியின் தாளத்தில் பல நூற்றாண்டுகள் நித்திரையில் இருந்த கோலம்…நாபியில் இருந்து பிரம்மன், காலருகில் லெட்சுமி ….மூன்று மண்டபங்கள் – தனி தாமரைஆசனத்தில் மீண்டும் பிரம்மன் …அனைத்தும் கலைக்க பட்டு…சிலை திருட்டு>>>>>>
944946949

முதலில் லக்ஷ்மி முகம் …அப்படியே பெயர்த்து எடுக்க எப்படி தான் மனம் வந்ததோ ? ஐயோ ..நெஞ்சம் வெடிக்கிறது…இதை படம் எடுத்து அதிகாரிகளுக்கெல்லாம் அனுப்பி உள்ளனர்…அப்போதும் எதுவும் நடக்கவில்லை…அதாவது நல்லது நடக்க வில்லை…அத்துடன் நின்றார்களா மாபாதகர்கள் …அடுத்து பெருமாளையும் பெயர்த்து எடுத்து விட்டனர்…
942
இப்போது எதோ ஒரு நல்ல உள்ளம் அதை செப்பனிட்டு உள்ளது…எனினும் அந்த புராதானமான சிலை …..951

மல்லை பூனை, சைவ பூனையோ

மல்லை பகிரத பிரயத்தனம் காட்சியில் அடி புறத்தில் வரும் ஒரு சுவாரசியமான காட்சி
921934
– ஒரு கால் தூக்கி தபஸ் செய்யும் பகிரதன் ( அல்லது அர்ஜுனணன்) – அவனை பின் தொடரும் ஒரு பூனையும் அவனை போல் தபஸில் உள்ளது –
926929
அந்த பூனை செய்யும் பொய் தபஸில் ஏமார்ந்து தனது ஜென்ம எதிரியை துதிக்கும் எலி….. பூனையின் தவம் கலைந்தந்தும் என்ன ஆகும்…. அது சைவ #######பிள்ளை##### மன்னிக்கவும்
பூனையோ.
924932

இராவணனை சீண்டும் குட்டி பூதகணம், யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி – முதலில் நாம் கம்போடியா சிற்பம் பார்த்தோம் …இப்போது எல்லோரா .
888891897
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் – தனது ஆணவத்தாலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் – ( சிதைந்தாலும் … அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா… வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு. அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.
895903899901906
ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது – மற்றொரு
பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை
காட்டி… அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை
கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது
893901

இந்த சிலை மிக பெரியது என்று சொல்லி விடலாம்…எப்படி உணர்த்த முடியும்..சரி, இதோ படம்.
910

quoting appar’s verses as below:

அப்பர் பாடியது 3-11.

கடுகிய தெர்செலாது கயிலாயமீது
கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் )
நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

முதலில் பூத கணங்களின் வேடிக்கை விளையாட்டு சிற்பியின் சிந்தனை என்று நினைத்தேன்… அதையும் அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார் (நன்றி திரு திவாகர் மற்றும் திரு சுப்ரமணியம் )…ஆஹா …இதோ வரிகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4034&padhi=&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் – திருமுறை 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியன் ஆகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா(று) அறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூதம் எல்லா[ம்] நான்மறைக் காட னாரே.

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.

மல்லை தவம் – யானைகள் ஒரு பார்வை

863841
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தங்கள் எழில் குறையாமல் இருக்கும் இவை அருமை. இவை அப்போது ( வடிவமைக்க பட்டவுடன் ) என்ன அழகுடன் இருந்திருக்கும் – இல்லையேல் ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் இவற்றுக்கு அழகு கூடுகிறதா??
855857859861
839
யானைகளின் மடிந்த காது, பின்னால் செல்லும் ( பெரிய) யானையின் வளைந்த துதிக்கை, ஒரு படத்தில் ( யானைகளின் முன்னால் இருந்து ) பாருங்கள் – யானை தலை மண்டை அமைப்பு ( குறிப்பாக இரண்டாம் யானையின் மண்டை – அழகாக இரு பிளவுகளுடன் ) – என்ன கம்பீரம் , இரு பெரிய யானைகளின் கால்களுக்குள், மற்றும் பின்னால் விளையாடும் குட்டி யானைகளின் அங்க அசைவுகள்…படத்தில் சூரிய வெளிச்சம் மற்றும் சிலையின் நிழல் செய்யும் விளையாட்டு – உயிரோட்டம்.
859865

இருக்கும் சிலை மிருகங்கள் போதாதென்று உயிர் ஆடுகள் வேறு. ( சிலையின் அளவை குறிக்க உதவுகிறது )
846849
( this picture is from a friend)
மல்லை சிற்பிகள் எந்த அளவிற்கு கலை வல்லுனர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இணைத்துள்ள யானை படத்துடன் சிர்ர்பங்களை ஒப்பிடுங்கள்
836859
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

என்னும் சீர்காழியின் வெங்கலக் குரலில் பாட்டு காதிலே ஒலிக்கிறது ( நன்றி திரு தமிழ்த்தேனீ ஐயா )

மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….